Thursday, February 24, 2011

நினைவெல்லாம் நீ

உன்னில் எனக்கு பிடித்தது என்ன?
எண்ண எண்ண சொல்லுவேன்
சொல்லில் மட்டும் சொல்ல மாட்டேன்
என் கண்ணில் கூட சொல்லுவேன்.

சொல்லும் போது மட்டும் அல்ல
உயிர் செல்லும் போதும் எண்ணுவேன்
இந்த ஜென்மம் மட்டும் அல்ல
எந்த ஜென்மமும் வேண்டுவேன்

வேண்டி நின்றது ஒன்றும் அல்ல
உன் பார்வை ஒன்றை தேடினேன்.

நானும் இப்படி இருந்தது இல்லை
என் மனமோ இப்படி துடித்தது இல்லை

இதை எல்லாம் சொன்ன நான் பைத்தியம் இல்லை
நீ மட்டுமே இதன் மருந்தாவதால் 
என் பைத்தியம் எப்பவும் தெளிவது இல்லை.

No comments:

Post a Comment